ஏமாற்றுக்காரன்

bookmark

பைத்தியம் பிடித்த ஒருவன் ஒரு மின் கம்பத்தைச் சுற்றிக்கொண்டே,’ ‘ஆண்டவனே, எனக்கு பத்து ரூபாய் கொடு,” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.

அவ்வழியே போன ஒருவர் அவன் மீது இரக்கப்பட்டு ஐந்து ரூபாய் கொடுத்துச் சென்றார்.

மறுநாள் மீண்டும் அவர் அப்பாதை வழியாக வரும்போது அந்தப் பைத்தியக்காரன் முன்போலவே,”ஆண்டவனே,எனக்குப் பத்து ரூபாய் கொடு,”என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

இவரைப் பார்த்தவுடன் அவன் உரக்க,”ஆண்டவனே, இம்முறை நீயே நேரடியாக பத்து ரூபாய் கொண்டு வந்து கொடு.

நேற்று நீ பத்து ரூபாய் கொடுத்து அனுப்பிய ஆள் ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு ஐந்து ரூபாய் தான் என்னிடம் கொடுத்தான். மகா திருடன்.” என்று கூவினான்.

இதனால் தான் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று முன்னோர் கூறியுள்ளனர்.