எதிர்கொள் படலம் - 1134

bookmark

இருவருடன் வந்த சேனையின் பெருக்கம்

1134.    

யானையோ. பிடிகளோ. இரதமோ. இவுளியோ.
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார்-
தானை ஏர் சனகன் ஏவலின். நெடுந் தாதை முன்
போன பேர் இருவர்தம் புடை வரும் படையினே?
 
நெடுந்தாதை   முன்பேர் இருவர் தம் புடை- (பெருமைக்குணம்)
மிக்க  தம்  தந்தையான  தசரதனது   எதிரிற் சென்று  பெருமைக்குரிய
(இராம.  இலக்குவர்)  இருவரின்  பக்கத்திலே;  தானை  ஏர்  சனகன்
ஏவலில் வரும் படையின் - படைக்குரிய அழகினையுடைய சனகனின்
ஏவலினால்   உடன்   வரும்.  சேனையில்;  யானையோ.  பிடிகளோ.
இரதமோ.  இவுளியோ - (ஆண்) யானைகளோ? பெண் யானைகளோ?
தேர்களோ?   குதிரைகளோ?   (இவற்றுள்   எவையோ   மிகுந்தவை?);
ஆனபேர் உறைஇலா நிறைவை யார் அறிகுவார்?-பெரிய எண்களை
எண்ணுவதற்கான      உறையென்னும்      குறிப்பிலககம்     இட்டும்
எண்ணமுடியாத  (அந்த  யானை  முதலியவற்றின்) நிறைவினை அறிந்து
கூறவல்லவர் யாவருளர்?

உறை     - ஓர் இலக்கக் குறிப்பு. பொருள்களை எண்ணுங் காலத்து
ஒவ்வொரு   பெரிய   எண்ணுக்கும்  கழற்சிக்காய்.     குன்றிமணிகளை
ஒவ்வொரு விழுக்காடு வைக்கும் சிறு குறியீடு. “உறைபோடக்  காணாது”
என்னும்   வழக்கம்   காண்க.   “ஒழிந்த  பேர்  உயிர்கள்   எல்லாம்
அரக்கருக்கு  உறையும்  போதா”  (கம்ப. 4868) ;“அம்பண   அளவை
உறை   குறித்தாங்கு”  (பதிற்.  11:5)  ;    “இவ்வரக்கர்........உறையிடவும்
போதார்” (கம்ப. 5344) எனவருவனவும் காண்க.                  21