அகலிகைப் படலம் - 534

bookmark

கங்கையைச் சன்னுமுனிவன் பருகி வெளியிட , அது
சாகரரின் உடல் சாம்பலை நனைத்தல் (534-535)

534.    

‘இழிந்த கங்கைமுன். மன்னவன்
   விரைவொடும் ஏக.
கழிந்த மன்னவர் கதி பெற
   முடுகிய கதியால்.
அழுந்தும் மா தவச் சன்னுவின்
   வேள்வியை அழிப்ப.
கொழுந்து விட்டு எரி வெகுளியன்.
   குடங்கையில் கொள்ளா.
 
பூவுலகில்     இறங்கிய   கங்கையின்  பின்னே  பகீரதன் விரைந்து
வந்தான்;  அக்  கங்கையின்   வேகத்தால்   சன்னு  முனிவனின் தவம்
கலைந்தது;   வெகுண்ட   அம்  முனி  அந்  நீரை  உள்ளங்  கையில்
மொண்டு கொண்டான் என்பது.

சன்னு  முனிவன்  பருகிக்  காதுவழி  வெளியிட்டதால்  கங்கைக்குச்
‘சானவி’ என்னும் பெயர் உண்டு.                             5-25