அகலிகைப் படலம் - 486

bookmark

இந்திரன் பவனிகண்டு முனிவர் வியப்படைதல்
(486-489)

486.    

‘பெய்யும் மா முகில் வெள்ளிஅம்
   பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம்
   மலர்ந்து. செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய
   முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு. அயிராவதக்
   களிற்றின்மேல் விளங்க.
 
யானைக்கு     மலை  உவமை   -  வலிமை.  பெருமை.  மதநீர்
அருவியுடைமை   பற்றி;  ஐராவதம்  -  இந்திரனது பட்டத்து யானை;
நான்கு தந்தங்களையுடையது; வெண்மை நிறமுடையது.

இந்திரன்     ஐராவத  யானைமேல் வீற்றுள்ள சிறப்பைச் சொல்வது
இப்பாடல்.  ஐராவதத்தின்   மேல் வீற்றிருப்பதால் இந்தரனுக்குச் சிறப்பு;
இந்திரன் வீற்றிருப்பதால் ஐராவதத்திற்குச் சிறப்பு.                3-6