வேள்விப் படலம் - 476
விசுவாமித்திர முனிவன் இராமபிரானைப் பாராட்டுதல்
476.
என்று கூறிய பின்னர். அவ்
எழில் மலர்க் கானத்து.
அன்று. தான் உவந்து. அருந்தவ
முனிவரோடு இருந்த
குன்றுபோல் குணத்தான் எதிர்.
கோசலை குருசில்.
‘இன்று யான் செயும் பணி என்கொல்?
பணி!’ என இசைத்தான்
என்று கூறிய பின்னர்- என்று முனிவன் ராமனைப் பாராட்டிக்
கூறிய பின்பு; அவ்வெழில் மலர்க்கானத்து - அழகிய மலர்கள்
நிறைந்த அந்தக் கானகத்தில்; தான் அருந்தவ முனிவரோடு - அரிய
தவத்தை உடைய மற்ற முனிவர்களோடும் சேர்ந்து; அன்று உவந்து
இருந்தான் - மகிழ்வுடன் தங்கி இருந்தான்; கோசலை குருசில் -
கோசலை பெற்ற குமாரனான இராமன்; இன்று யான் செயும் பணி
என்கொல் - இன்று. இனிமேல் நான் செய்யவேண்டிய பணி
என்னவோ; பணி என - கட்டளை இட்டருளக என்று; குன்றுபோல்
குணத்தான் எதிர் - மலை போலும் அளவிடற்கரிய குணத்தவனான
விசுவாமித்திரனிடம்; இசைத்தான் - கேட்பானாயினான்.
எழில்: அழகு. மலர்க்கானம்: மலரையுடைய கானகம். உவந்து:
மகிழ்ந்து. இருத்தல்: தங்கியிருத்தல். இன்ப. துன்பங்களுக்குச்
சலியாதிருக்கும் குணம் உடைமையால் ‘’குன்றுபோல் குணத்தான்’’ என
முனிவன் சிறப்பிக்கப்பட்டான் என்பர். ‘குருசில்’: வெருமைமிக்கோன்
பணி: கட்டளை. இசைத்தான்: சொன்னான். 57
