வேள்விப் படலம் - 447
447.
‘’வெள்ளியை ஆதல் விளம்பினை. மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்.
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.
வெள்ளியை ஆதல் விளம்பினை- நீ வெள்ளறிவுடையனாதலின்.
உன் இயற்கைக்கேற்ப சொல்லினை; மேலோர் - மேன்மைக் குணம்
உடைய பெரியோர்கள்; வள்ளியர் ஆக - தாம் வள்ளமை
உடையோராயின்; இன் உயிரேனும் - தமது இனிய உயிரையே
என்றாலும்; வழங்குவர் அல்லால் - கொள்வோர்க்குக் ?கொடுப்பாரே
அல்லாமல்; எள்ளுவ என்சில- சில கூறி பரிகசிப்பரோ?; கொள்ளுதல்
தீது கொடுப்பது நன்று - பிறர்பால் ஏற்றல் தீமை ஈதலே
நன்மையாகும்.
வெள்ளியை: பெயருக்கேற்ப. வெள்ளறிவுடையவன் என்று
நயம்படக் கூறினார். வள்ளியர்: வள்ளன்மை உடையோர். கொள்ளுதல்
தீது கொடுப்பது நன்று ‘நல்லாறெனினும்’ கொளல் தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று’’ என்ற திருக்குறள் கருத்து அமைந்த
பாட்டிது. ‘எள்ளுவ என் இதில் ‘என்’வினாப் பொருட்டு. விளம்பினை:
முன்னிலை வினைமுற்று. ஆல்: அசை. 28
