வேள்விப் படலம் - 422

bookmark

இராமபிரான் வினாவும் விசுவாமித்திரன் விடையும்

422.

இனையன நிகழ்ந்த பின்னர்.
   காவதம் இரண்டு சென்றார்;
அனையவர் கேட்க. ஆண்டு ஓர்
   அரவம் வந்து அணுகித்தோன்ற
‘முனைவ! ஈது யாவது?’ என்று.
   முன்னவன் வினவ. பின்னர்.
வினை அற நோற்று நின்ற
   மேலவன் விளம்பலுற்றான்;
 
இனையன  நிகழ்ந்த பின்னர்  -  இவையெல்லாம்   நடந்த பின்பு
காவதம்  இரண்டு சென்றார்  -  இராமன் முதலிய  மூவரும் இரண்டு
காததூரம்  நடந்து  சென்றனர்; ஆண்டு அனையவர் கேட்க - அங்கு
அந்த    மூவரும்    கேட்டுகும்படியாக;    ஓர்    அரவம்   வந்து
அணுகித்தோன்ற  -  ஒருபெருத்த குரல் பக்கத்தே எழ; முனைவ! ஈது
யாவது  என்று  முன்னவன் வினவ - முனிவரே இந்த ஓலம் எதனால்
தோன்றியது என ராமன் கேட்க; பின்னர் வினை அற நோற்று நின்ற
மேலவன்  விளம்பல் உற்றான் - பின்பு. இரு வினையும் நீங்கத் தவம்
செய்து மாமுனிவனாக நின்ற விசுவாமித்திர முனிவன் சொல்லானான்.

நிகழ்தல்:    நடத்தல்.  காவதம்:  காதம்  (பத்து நாழிகைத்  தூரம்).
அரவம்:   பேரொலி.   முனைவன்:   வினையின்    நீங்கி   விளங்கிய
மேலோன்.  முனைவன்:  மூத்தவன்   அனைவருக்கும்   முன்னோனான
முதல்வன். வினையற:  தீவினை  நீங்க (இருவினையும் நீங்க).  தோற்றல்:
நோன்பு.   நின்ற:   நற்குண   நற்பண்புகளில்   நினைத்த.  விளம்பல்:
சொல்லல்.  உற்றான்:  பொருந்தினான். ‘உறு’ என்று  பகுதி  இரட்டித்து
இறந்த காலம் காட்டிற்று.                                      4