வான்
விண்மீன் நிறைந்த வான்
நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை
பகல் வானில் முகிலோவியங்கள்
பகல்வானிற் கதிரின் வீச்சுப் பரந்தது! முகிலி னங்கள்
வகைவகை ஓவி யங்கள் வழங்கின; யானைக் கூட்டம் !
தகதக எனும்மா ணிக்க அருவிகள் ! நீலச் சாரல் !
புகைக்கூட்டம் ! எரிம லைகள்! பொன் வேங்கை ! மணிப்பூஞ்சோலை ! (73)
இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்
கிழக்குப்பெண் விட்டெ றிந்த கிளிச்சிறைப் பரிதிப் பந்து,
செழித்தமேற் றிசைவா னத்தின் செம்பருத் திப்பூங் காவில்
விழுந்தது! விரிவி ளக்கின் கொழுந்தினால் மங்கை மார்கள்
இழந்ததைத் தேடிக் கொள்ள இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள்! (74)
காலை வானம்
கோழிகூ விற்று ! வையம், கொண்டதோர் இருளைத் தங்க
மேழியால் உழுதான் அந்த விரிகதிர்ச் செல்வன் ; பின்னர்
ஆழிசூழ் உலகின் காட்சி அரும்பிற்று ! முனைய விழ்ந்து
வாழிய வைய மென்று மலர்ந்தது காலை வானம்! (75)
வானவில்
மழை வான்
எரிகின்ற வானம்
தேன்செய்யும் மலரும் தீயும் ! செந்தீயும் நீறாய்ப் போகும் !
கான், செய், ஊர், மலை, கா, ஆறு கடலெல்லாம் எரிவ தோடு
தான்செய்த தணலில் தானும் எரிகின்றான் பகலோன்! அங்கு
வான்செய்த வெப்பத் தால்இவ் வையத்தின் அடியும் வேகும் ! (78)
உச்சிப்போதுக்கும் மாலப்போதுக்கும் இடைநேரம்
வான் தந்த பாடம்
