மூன்றாவது வழி:

bookmark

சுமார் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து, வலியானவட்டம், செறியானவட்டம் ஆகிய பகுதிகளைக் கடந்தால் பம்பை நதிக்கரையை அடையலாம். பந்தள நாட்டு அரசர் ராஜசேகரன் இந்நதிக்கரையில்தான் குழந்தை ஐயப்பனைக் கண்டெடுத்தார் என்பதால் பம்பை நதிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. கங்கையைப் போன்று பம்பையையும் ஒரு புண்ணிய நதியாகவே கருதுவர். இந்நதியில் முங்கி எழுந்தால் எல்லா தீமைகளும் நீங்கப்பெற்று புனிதமாகலாம் என்பது நம்பிக்கை. பம்பையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சன்னிதானம் உள்ளது. நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், சரம்குத்தி சன்னிதானத்திற்குச் செல்லும் வழியிலுள்ள முக்கிய இடங்கள்.

”வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் கொண்டதுதான். உயரங்களை எட்ட வேண்டுமானால் கடின முயற்சி எடுக்கவேண்டும்.” சாரிமலைப் பயணம் நமக்குக் கற்பிக்கும் பாடம் இதுதான்.