மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

bookmark

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

1. பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் - 2
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

2. மரணம் வருவதை மனிதன் அறிவானோ -2
தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ

3. இறைவன் இயேசுவோ இறப்பைக் காடந்தவர் -2
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்