புதுப்புது ராகங்கள் இசைத்திடுவேன்

bookmark

கன்னிமரியின் பாலகனே
எந்தன் கண்மணியே ஓ .. எந்தன் கண்மணியே

1. வானத்தில் நீந்திடும் மேகங்களே
பூமலர் தூவுங்கள் பனித்துளிபோல்
பூவுலகை ஆளவந்த கண்மலரே பூசிக்க வா
மலர்முடி மன்னா கன்னிமரி கண்ணா
திருவடி தொழுதிடுவேன் மன்னா
ஆரிரராரிரரோ ஓ.. ஆரிரராரிரரோ

2. ஏழிசை உனக்காய்ப் பாடிடுவேன்
எழில்மிகு தீபங்கள் ஏற்றிடுவேன்
மானிடரைக் காத்திடவோ மண்ணகத்தில் நீ பிறந்தாய்
பூவிழி அரும்பே பொன்னுலகம் மலரும்
புதுமைகள் படைத்திட வா - ஆரிரராரிரரோ ஓ.. ஆரிரராரிரரோ