நாட்டுப் படலம் - 59
இடைச்சியர் தயிர்கடைதல்
59.
தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.
தோயும் வெண் தயிர் - தோய்ந்துள்ள வெண்மையான தயிரைக்
(கடைகின்ற); மத்து ஒலி துள்ளவும்- மத்தின் ஓசை விட்டுவிட்டு
ஒலிக்கவும்; ஆய வெள்வளை- (தம் கைகளில் அணிந்துள்ள)
நுட்பமான வேலைப்பாடுடைய வெண்ணிறச் சங்கு வளையல்கள்; வாய்
விட்டு அரற்றவும்- வாய்திறந்து கத்துவதுபோல ஒலிக்கவும்; தேயும்
நுண் இடை- மெலிந்த சிறிய இடை; சென்று வணங்கவும்- முன்புறமாக
வளையவும்; ஆய மங்கையர்- இடைக்குல மகளிர்; அங்கை
வருந்துவர்- அழகிய கைகள் வருந்தும்படி கடைவார்கள்.
வெண்டயிர் - கடைதலுக்கும்
செந்தயிர் உண்டலுக்கும் உரியன.
துள்ளுதல்: விட்டுவிட்டு ஒலித்தல். ஆய் வளை: நுட்பமான
வேலைப்பாடு கொண்ட வளையல்கள்: ‘ஓய்தல் ஆய்தல் நிகழ்த்தல்
சாஅய் ஆவயின நான்கும் உள்ளதன் நுணுக்கம்’ என்பது
தொல்காப்பியம். (தொல். சொல். உரி. 32)
தன்மை நவிற்சியணி 28
