நகரப் படலம் - 156
மாளிகையில் மாதர்கள் முகமும் விழிகளும் மலர்தல்
156.
சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன. மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ; மற்று அவை.
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே.
சூளிகை மழை முகில் தொடக்கும்- அந் நகரத்து மாளிகைகளின்
உச்சி (மிக உயர்ந்திருப்பதால்) மேகத்தைப் பிணிக்கும்; தோரன
மாளிகை மகளிர் வாண்முகம் மலர்வன - தோரணங்களால்
அலங்கரிக்கப்பட்டு விளங்கும் மாளிகைகளிலெல்லாம் மகளிரின்
ஒளிமிகு முகங்கள் மலர்ந்து பொலிவனவாகும்; அன்னவை வாளிகள்
மலர்வ- அம்முகங்களில் அம்புகள் விளங்குகின்றன (கண்கள்); மற்று
அவை ஆளிகள் அன்னவர் நிறத்தில் ஆழ்ப- மற்று. அவ்வம்புகள்
சிங்கத்தை ஒத்த ஆடவர்களின் மார்பில் ஆழ்வனவாம்.
தொடக்கும்: பிணிக்கும்; வாள்முகம்: ஒளி பொருந்திய முகம்;
வாளிகள்: அம்புகள்; கண்களை அம்பு என்றது உருவகம்; நிறம்:
மார்பு; அன்னவை: அம்முகங்கள்; ஆளி: சிங்கம். 64
