நகரப் படலம் - 124

bookmark

மாளிகைகள் தேவவிமானம்போலத் திகழ்தல்

124.

புக்கவர் கண் இணை பொருந்துறாது, ஒளி
தொக்குடன் தயங்கி, விண்ணவரின் தோன்றலால்,
திக்குற நிலைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன, உம்பர் நாட்டினும்.
 
புக்கவர் -     பார்க்கப்   (புகுந்தவர்) வந்தவர்; கண் இமை- கண்
இமைகள்;  பொருந்துறாது- வியப்பின் மிகுதியால், மலர்ந்து விளங்குமே
அல்லாது   ஒன்றுடன்  ஒன்று  சேரா  (கண்  கொட்டாமல் பார்த்தனர்
என்பது    கருத்து);  ஒளி-  மாளிகைகளில்  பதித்த  இரத்தினங்களின்;
பூசிய வெண்சாந்தின்  ஒளி;   தொக்கு  உடன் தயங்கி  - பார்ப்பவர்
உடலின்மீது   பாய்வதால்  (எதிரொளி)  அவர்கள்  விளகம்    பெற்று;
விண்ணவரின்-     தேவர்களைப்     போல;       தோன்றலால்-
காட்சியளிப்பதாலும்;   திக்குற-   எல்லாத்  திசைகளிலும்;  செல்லும்-
செல்ல வல்ல; தெய்வ வீடு- தெய்வீக விமானம்; ஒக்க- போல; நின்று-
நிலத்தல் பதிந்து கிடக்கும்; உம்பர் நாட்டின்- அம்மாளிகைகளின் ஒளி
வெள்ளம் தேவர் உலகத்தும்; இமைப்பன- சென்று ஒளி வீசுவன.

எப்போதும்      ஒளி  உமிழ்வதும் இயங்கும் இயல்பினவுமாய தேவ
விமானங்கள்   மண்ணகத்துத்    தங்கிய    போல்   அம்மாளிகைகள்
விளங்கின.  அவற்றின்   ஒளி  காண்பார் உடல்களில் பதிவதாலும் கண்
இமையாது  இருத்தலாலும்  அவர்களும்  தேவராயினர் என்பது கருத்து.
                                                        32