திரு அவதாரப் படலம் - 313

bookmark

இராமன் நகரத்தாரை நலம்வினாவுதல்

313.

எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயைும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.
 
எதிர்   வரும் அவர்களை- தம்மை எதிர்ப்படும் நகர மக்களைப்
பார்த்து;   எமை   உடை   இறைவன்  -  எம்மை  ஆட்கொண்ட
இறைவனாகிய  ராமபிரான்;  முதிர்  தரு  கருணையின் -  முதிர்ந்த
கருணையினால்  (தனது);  முகமலர்  ஒளிரா  - மலர் போன்ற முகம்
ஒளிர;  எதுவினை  -  எம்மால் உங்களுக்கு ஆக வேண்டியதுளதோ?;
இடர்  இலை (கொல்)- துன்பமெவும் இல்லையன்றோ?; நும்மனையும்
இனிதுகொல் - உங்கள் மனைவி நலமோ?; மதிதரு குமரரும் வலியர்
கொல்   எனவே   -  அறிவு   மிக்க   பிள்ளைகள்  வலிமையுடன்
வாழ்கிறார்களா? என்றெல்லாம் கேட்கவே.                     132