திரு அவதாரப் படலம் - 298

bookmark

இராமன் எனப் பெயரிடுதல்

298.

கரா மலை. தளர் கைக் கரி எய்த்தே.
‘அரா-அணையில் துயில்வோய்!’ என. அந் நாள்.
விராவி. அளித்தருள் மெய்ப்பொருளுக்கே.
‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனன் அன்றே.
 
கரா மலைய-ஒரு முதலை காலைக் கவ்விக் கொண்டு வருத்த; தளர்
கைக்கரி  -  அதனால்  சோர்வுற்ற துதிக்கையை உடைய யானையான
கஜேந்திரன்;  அரா அணையில்  துயில்வோய் என - பாம்பணையில்
துயில்பவனே  என அழைக்க; அந்நாள் விராவி அளித்தருள் -அந்த
நாளிலே   விரைந்து   அந்த   முதலையை   அழித்து   யானையைக்
காத்தருளிய;    மெய்ப்பொருளுக்கு    -   உண்மைப்  பொருளான
அப்பரமனுக்கு; ‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனர் - இராமன் என்னும்
பெயரை (வசிட்டன்) சூட்டினான்.

கரா:      முதலை.   தளர்   கரி:   வினைத்தொகை.   எய்த்தல்:
இளைத்தலுமாம். அராஅணை: அரவணை (பாம்புப் படுக்கை).  விராவி:
சேர்தலுமாம்.   அராஅணைத்   துயில்வோய்  என  விளித்து   தான்
பன்னாள்  துன்புறவும் அது பற்றிக் கவலை உறாமல்  உறங்குகின்றாயே
பெருமானே   என்ற   குறிப்புடையது.   மெய்ப்பொருள்:   உண்மைப்
பொருளாகிய பரமன். ராமன்: அழகன். அன்றே: அசை.           117