திரு அவதாரப் படலம் - 290
முரசறையுமாறு தசரதன் கட்டளையிடுதல் (290-292)
290.
‘‘இறை தவி்ர்ந்திடுக பார். யாண்டு ஓர் ஏர்; நிதி
நிறைதரு சாலை தாள் நீக்கி. யாவையும்
முறை கெட. வறியவர் முகந்து கொள்க’’ எனா.
அறை பறை’ என்றனன் - அரசர் கோமகன்.
யாண்டும் ஓர் ஏழ் பார்இறை தவிர்ந்திடுக-ஏழாண்டுகள் நாட்டில்
திறை செலுத்துவதைச் சிற்றரசர் தவிர்க்க; நிதி நிறைதரு சாலை -
செல்வம் நிறைந்த பொருள் பாதுகாப்பறையை; தாள் நீக்கி -
தாழ்ப்பாளை அகற்றித் திறந்து வைத்து; யாவையும் வறியவர்
முறைகெட முகந்து கொள்க எனா - வரன் முறையில்லாது எல்லாச்
செல்வத்தையும். ஏழை எளியவர்கள் முகந்து கொள்ளுங்கள் என்று;
அரசர் கோமகன் பறை அறை என்றனன் -மன்னர் மன்னனான
தயரதன் பறை அறைந்து தெரிவியுங்கள் என்றான்.
இறை: சிற்றரசர் செலுத்தும் கப்பம் (மக்கள் செலுத்தும் வரி
எனவும்) கூறுவர். யாண்டு: ஆண்டு. நிதிநிறை தரு சாலை:
பொக்கிஷம். முறைகெட: இன்னார் இனியார் என்ற வரன்முறை இன்றி
யாவரும் ஒருங்கே என்பது பொருள். வறியவர்: வறுமையாளர். கொள்.
தவி்ாந்திடுக என்பன வியங்கோள் வினை முற்றுகள். அறை: ஏவல்
வினைமுற்று. எனா: என்று (செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம்).
பறையறைதல்: எல்லோருக்கும் பொதுப்பட அறிவித்தல்.
பிள்ளைகள் பிறந்த மகிழ்ச்சியால் ஏழாண்டுகள் திறை தவிர்க
எனவும். யாவையும் முறைகெட முகந்து கொள்க எனவும் பறை
அறையுமாறு மன்னர் மன்னன் கட்டளையிட்டான் என்பது கருத்து. 110
