திரு அவதாரப் படலம் - 250

bookmark

250.

நல் தவம் அனைத்து.
   ஓர் நவை இலா உருப்
பெற்று. இவண் அடைந்தெனப்
   பிறங்குவான்தனை.
சுற்றிய சீரையும்.
   உழையின் தோற்றமும்.
முற்று உறப் பொலிதரு
   மூர்த்தியான்தனை.
 
நல்   தவம் அனைத்தும்   ஓர்-  நல்ல  தவங்கள் அத்தனையும்
சேர்ந்து  ஒரு;  நவை  இலா உருப்பெற்று -  குற்றமற்ற வடிவத்தைத்
தாங்கி;  இவண்  அடைந்த  என  - இங்கே  அடைந்துள்ளது என்று
கூறும்படி;   பிறங்கு   வான்   தனை   -  விளங்குகின்ற    தொரு
பெருமையுடையவனை;   சுற்றிய   சீரையும்   -   இடுப்பைச்  சுற்றி
அணிந்துள்ள  மரவுரியையும்;  உழையின்  தோற்றமும்  -  மானைப்
போன்றதொரு   தோற்றமும்;   முற்றுறப்  பொலிதரு  மூர்த்தியான்
துணை- முழுதும் பொருத்தமுற விளங்குகின்ற வடிவம் கொண்டவனை.

அடுத்த    பாட்டுடன் பொருள் முடிவு பெறுவதாதலின் இது குளகம்.
பிறப்பு.  உறுப்பு. தொழில். தோற்றம் இவைகளால்   பெருமை மிக்க தவ
முனிவன்   என்பது   இப்பாடல்கள்   கூறும்  சிறந்த    பொருளாகும்.
நன்மை+தவம்:  நற்றவம்.  பண்புத்தொகை.  உழை: மான்.   பிறங்குதல்:
பொலிதல்.  முற்றுறப் பொலிதரல்: அகமும். புறமும் ஒத்துப்   பொலிதல்.
மூர்த்தம்: வடிவம் (உருவம்). எனவே வடிவத்தை  உடையவன்  என்பது
பொருளாகும்.

இந்தப்   பாடலும்.  அடுத்த  பாடலும்  கலைக்கோட்டு  முனிவரின்
அரிய தோற்றத்தை விவரிப்பதாகும்                            71