திரு அவதாரப் படலம் - 245
கலைக்கோட்டு முனி தேரிற் செல்லுதல்
245.
குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட.
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர.
வனிதையும். அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும். பொறிமிசை நெறியை முன்னினார்.
குனி சிலை வயவனும்- வளைந்த வில்லையுடைய வெற்றி மிகுந்த
வேந்தனான உரோபத மன்னனும்; கரங்கள் கூப்பிட - கைகளைக்
குவித்து வணங்கி நிற்கவும்; துனி அறு முனிவரர் - குற்றம் நீங்கிய
மனத்தினரான முனிவர்கள் பலரும் தொடர்ந்து சூழ்வர- தொடர்ந்து
பின்பற்றிவரவும்; வனிதையும் அருமறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும் - தனது வாழ்க்கைத் துணைவியான சாந்தையுடன். அரிய
வேதங்களே உருவெடுத்து வந்தது போன்ற அந்த முனிவனும்;
பொறிமிசை -இயந்திரத் தேர் மீது அமர்ந்து; நெறியை முன்னினார்-
அயோத்தியின் வழியே செல்ல எண்ணினார்.
குனி சிலை - வளைந்த வில். குனிதல்: வளைதல் குனி சிலை
வினைத் தொகை. வயவன்: வெற்றியுடையவன். வயவனும் “உம்
எதிரது தழீஇயது. கூப்பிட - குவிக்க (கூப்பு+இடு+அ) ‘இடு’ என்பது
துணை விகுதி. கூப்பு: வினை. துணி: உலக இயற்கையால் நேரும்
துன்பமாம். அதனை வென்றவர்களாதலால் “துனி அறு”
முனிவராயினர். பொறி: இயந்திரம் ( “இயந்திர எகின மூர்ந்து”)
என்பது வில்லிபாரம். நினைந்த நெறியில் செல்ல வல்லது என்பதால்
“தேர் ஏறி நெறியை முன்னினார்” என்று கூறப்பட்டது.
கரங்கள் கூப்பிட. சூழ்வர வனிதையும் முனியும் பொறிமிசை -
நெறியை முன்னினார் என இயைக்கவும். 66
