திரு அவதாரப் படலம் - 229
229.
அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை.
வர முனி. “வஞ்சம்” என்று உணர்ந்த மாலைவாய்.
வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்.
கரை எறியாது அலை கடலும் போன்றனன்.
அரசனும் முனிவரும் - உரோமபத மன்னனும் அவனைச் சூழ்ந்து
வந்த முனிவர்களும்; அடைந்த ஆயிடை - தன்னை வந்தடைந்த
காலத்தில்; வரமுனி - சிறந்த முனிவனாகிய கலைக்கோட்டு முனிவன்;
வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் - தன்னை இங்கு அழைத்து
வந்து ‘வஞ்சகச் செயல்’ என்று தெளிந்த போதிலே; விண்ணவர்
வெருவினர் -தேவர்கள் அஞ்சி நடுங்கினர்; வேந்தன் வேண்டலால்-
அரசன் வேண்டிக் கொண்டதால்; கரை எறியாது அலை கடலும்
போன்றனன் - கரையை மோதி அழித்துவிடாது அலைக்கும் கடல்
போல அந்த முனிவன் கட்டுப்பட்டிருந்தான்.
ஆயிடை: அப்போது. ‘வரமுனி’ வரம் + முனி (வரம் தருமுனிவன்).
உணர்ந்த: தெளிந்த (ஆய்ந்து தெளிந்த). மாலைவாய்; வாய் ‘ஏழாம்’
வேற்றுமை உருபு “விண்ணவர் வெருவினர்” என்ன நேருமோ என்று
தேவர்கள் அஞ்சினர். கரை கடவாத கடல் போல. முனிவன் வஞ்சகம்
என உணர்ந்தும் நிலை கடவாது பொறுமையுடன் இருந்தான்.
அலைகடல்: வினைத்தொகை. 50
