திரு அவதாரப் படலம் - 207
207.
அருல் தரும் கமலக்கண்ணன்
அருள்முறை. அலர் உளோனும்
இருள் தரும் மிடற்றினோனும்.
அமரரும். இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில். மண்ணில்.
வானரர் ஆகி வந்தார்;
பொருள்தரும் இருவர் தம்தம்
உறைவிடம் சென்றுபுக்கார்.
அருள்தரும் கமலக் கண்ணன் அருள்முறை- கருணைமிக்க
தாமரைக் கண்ணனாகிய திருமால் அருள் செய்த முறைப்படியே;
அலருளோனும் இருள்தருமிடற்றினோனும்-தாமரை மலரில் உறையும்
பிரமனும் இருண்டமிடற்றை உடைய சிவபிரானும்; அமரரும் இளையர்
ஆகி- மற்றத் தேவர்களும் மேலே கூறிய முறைப்படி
வடிவெடுத்தவராகி; மருள்தருவனத்தில்- இருண்ட காடுகளிலும்;
மண்ணில் வானரராகி வந்தார்- நிலத்திலும் குரங்குகளாக உருமாறி
வந்துள்ளார்கள்; பொருள்தரும் இருவர்- எல்லோரும் பொருட்டாகக்
கருதிப் போற்றும் பிரமன். சிவன் ஆகிய இருவரும்; தம்தம்
உறைவிடம் சென்று புக்கார்- தங்கள். தங்கள் உறைவிடங்களுக்குச்
சென்று சேர்ந்தார்கள்.
பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சை உண்டு. தேவர்களைக்
காத்தபோது அந்த நஞ்சு மிடற்றிலே நின்றுவிட சிவபிரான்
நீலகண்டனாயினான். அதனையே “இருள்தருமிடற்றினோன்” என்றார்.
பொருள்தரும்: குறிப்பிட்டுக் கூறத்தக்க இருவர் பிரமனும். சிவபிரானும்
என்பதைக் குறித்தது. திருமால் அருளிய முறைப்படி தேவர்கள்
யாவரும் வானரங்களாகித் தங்கள் இருப்பிடங்களை அடைந்தனர்
என்பது கருத்து. 28
