தாடகை வதைப் படலம் - 407

bookmark

விசுவாமித்திரன் தாடகையைக் கொல்லுக எனல்

407.

‘ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்?பகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அறன் அன்று; அரக்கியைக்
கோறி’ என்று. எதிர் அந்தணன் கூறினான்.
 
ஈறில்   நல்   அறம்  பார்த்து  இசைத்தேன்  -  அழிவில்லாத
நல்லறத்தை    நோக்கியே   கூறினேன்;  இவள்  சீறி  நின்று  இது
செப்புகின்றேன் அலேன் -  இவளைக் கோபித்து நின்று இதனை நான்
சொல்கிறேன்;   ஆறி  நின்றது  அறன்  அன்று  -  எனவே அரச
குலத்தவனாகிய நீ இவளது  தீச்செயலை  அறிந்தும்  இவ்வாறு தணிந்து
நிற்பது தருமம் அல்ல; அரக்கியைக் கோறி என்று எதிர் அந்தணன்
கூறினான் -   இந்த   அரக்கியைக்  கொல்வாயாக என்று எதிர் நின்று
விசுவாமித்திரன் கூறினான்.

ஈறு:   முடிவு   (அழிவுமாம்).  நல்லறம்:  உயிர்களுக்கு     நன்மை
தரும்பொருட்டுச்   செய்யும்  அறம்.  இசைத்தல்:  சொல்லுதல்.    சீறி:
சினம்கொண்டு.   செப்புதல்:   சொல்லுதல்.  ஆறி:  தணிந்து.   கோறி:
கொல்லுதி.   கொலையிற்   கொடியாரை  வேற்தொறுத்தல்   பைங்கூழ்
களைகட்டதனோடு  நேர்  என்பது  குறளறம்.  உயிர்களுக்குத்   தீங்கு
செய்யும்  இவளைக்  கொல்வதுதான்  அறம்.  ஆறி  நின்றது    அறம்
அன்று என்பது கருத்து.                                     44