தாடகை வதைப் படலம் - 398

bookmark

ஆடவர் ஆண்மை இவள் பேர் சொன்னாலும்
அகலும் எனல்

398.

‘நாண்மையே உடையார்ப் பிழைத்தால். நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்.
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே?
 
நாண்மையே  உடையார்ப் பிழைத்தால் நகை- நாணம்  முதலான
பெண்மைக்  குணம்  உடையவர்களுக்குத்  தீங்குசெய்தால்  அது கண்டு
வீரம்   மிக்க  ஆடவர்  நகைத்துப்  பரிகசிப்பர்; வாண்மையே பெற்ற
வன்திறல்  ஆடவர்  தோண்மையே   -   வாள்முதலான   போர்க்
கருவிகளில்     வல்ல     வலிமைமிக்க    வீரர்களான   ஆண்களின்
தோளாற்றலும்; இவள் பேர் சொலத் தோற்கு மேல் - இத்தாடகையின்
பெயரைச்   சொல்லக்  கேட்டவுடன் தோற்று விடுமென்றால்; ஆண்மை
என்னும்  அது  ஆரிடை  வைகும் - ஆண்மை என்று கூறும் அந்த
அஞ்சாத பண்பு யாரிடம் இருக்கும். (சிந்தித்துப்பார்) என்றபடி.

நாண்மை:   நாணம்.   உடையார்:    உடையாரை.    பிழைத்தால்:
தவறுசெய்தால்.  நகை:  சிரிப்புக் கிடமாகும்.  வன்திறல்:   வலியதிறமை.
தோண்மை:   தோளாற்றல்  ஆண்மை  யாரிடம்  இருக்கும்?    பெண்
வடிவுடைய   இவளிடமா?  இவள்  பெயரைக்  கேட்டதும்   தோற்கும்
ஆண்களிடமா?  என்று  கேட்டான். விசுவாமித்திரன் என்பது   கருத்து.
வைகும்: தங்கும்.                                           39