தாடகை வதைப் படலம் - 393

bookmark

393.

‘கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட. கருவறுத்தனென்; இனி. ‘’சுவை கிடக்கும்
விடக்கு அரிது’ எனக் கருதியோ? விதிகொடு உந்த.
படக் கருதியோ? - பகர்மின். வந்த பரிசு!’ என்றே.
 
கடக்க  அறும் வலத்து எனது காவல் இது  -  வெல்லுதற்  கரிய
வலிமை  உடைய  என்னுடைய  ஆட்சிக்கு  உட்பட்டது  இது;  யாவும்
கெட  கரு  அறுத்தனென் -  இங்குள்ள  எல்லாம்  கெடும்படி   கரு
வறுத்துவிட்டேன்;  இனி   சுவை    கிடக்கும்   விடக்கு   அரிது
எனக்கருதியோ  -   இனிமேல் எனக்குச் சுவைமிக்க ஊன் கிடைப்பது
அரியது  என்று  எண்ணியோ  (அல்லது);  விதிகொடு  உந்த  படக்
கருதியோ  -  விதி  தனது  வலிமைகொண்டு தள்ள நீங்கள்  அழிந்து
போக நினைத்தோ; வந்த  பரிசு  பகர்மின்  என்றே  -  இங்குவந்த
தன்மையைச் சொல்லுங்கள் எனச் சொல்லி.

‘’என்றே.  ஒரு  வார்த்தை  உரை  செய்தனள்’’   எனக்   கூட்டிப்
பொருள்  கூறினும்  பொருந்தும்.  கடக்க+அரும்:   கடக்கரும்  ‘அகரம்
தொக்கது    வலத்த     (வலம்+அத்து+அ)     பெயரெச்சம்.   காவல்:
தொழிற்பெயர்.   கரு    அறுத்தல்:   இளமையிலேயே  அழித்துவிடல்
விடக்கு:  ஊன்  ‘கொண்டு’   என்பது  இடைக் குறையாய் ‘கொடு’ என
நின்றது.  பட:  அழிய பகர்மின்:  ஏவற்பன்மை  பரிசு: விதம் எவராலும்
வெல்ல  முடியாதவள்யான்.  எனது   காவலுக்குரிய  இந்த  நிலத்திலே
உள்ளதெல்லாம்  அழியும்படி   கருவறுத்துவிட்டேன்.  எனக்குத் தின்ன
ஊன்  கிடையாதென்றெண்ணி.  உணவாக  வந்தீர்களோ.   விதி  உந்த
அழிய வந்தீர்களோ? கூறுங்கள் என்றாள் என்பது பொருள்.        34