தாடகை வதைப் படலம் - 370

bookmark

பிரமன் வரங்கொடுத்து மறைதல்

370.    

‘ “பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்.
ஏமுறு மதலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும் . தனயை தோன்றும்; நீ
போ” என. மலர் அயன் புகன்று போயினான்.
 
பூ மட மயில்- அழகிய இளமையான மயில்; பொருவும் - ஒக்கும்;
பொற்பு  -  அழகு; மதமலை - மதங் கொண்ட யானை; ஈர்ஐந்நூறு -
ஆயிரம்;  வலி  -  வலிமை;  தனயை  -  மகள்;  மலர்  அயன்  -
பிரமன்.                                             20-5