தாடகை வதைப் படலம் - 364

bookmark

364.

‘பெரு வரை இரண்டொடும். பிறந்த நஞ்சொடும்.
உரும் உறழ் முழக்கொடும். ஊழித் தீயொடும்.
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம்எனின்.
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே:
 
பெரு  வரை இரண்டொடும்   -  பெரியமலைகள்  இரண்டுடனும்;
பிறந்த நஞ்சொடும் - தன்னிடம் தோன்றிய  நஞ்சுடனும்; உரும் உறழ்
முழக்கொடும்  - இடிக்கு ஒப்பான முழக்கத்துடனும்; ஊழித் தீயொடும்
-   ஊழிக்  காலத்துப்  பெரு  நெருப்புடனும்;  இரு பிறை  செறிந்து-
இரண்டு  பிறைச்  சந்திரர்கள் சேர்ந்து; எழுகடல் உண்டாம்  எனின்-
எழுகின்ற கடல் ஒன்று உண்டென்றால் அது; வெருவரு  தோற்றத்தள்
மேனிமானும்  -  யாவரும் அஞ்சத்தக்க தோற்றத்தை உடைய அவளது
உடலை ஒத்ததாகும்.

பெருவரை:  பெரியமலை. கொங்கைகள் இரண்டும் மலைகள் கண்கள்
இரண்டும்.   நஞ்சு:   பெருங்குரல்.   இடிமுழக்கம்.  கூந்தல்:  ஊழித்தீ.
கோரைப்பற்கள்.  பிறைச்   சந்திரன்   இவையெல்லாம்  உடைய  கடல்
ஒன்று   உண்டெனில்   இவள்   உடலுக்கு   ஒக்கும்  எனக்  கூறியது
இல்பொருள் உவமை யணியாம். மானும்: ஒத்திருக்கும்.            23