தாடகை வதைப் படலம் - 351

bookmark

351.

கண் கிழித்து உமிழ் விடக்
   கனல் அரா-அரசு கார்
விண் விழித்து ஒளிரும் மின்
   அனைய பல் மணி. வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள்.
   மண்மகள் உடல்
புண் கிழித்திட எழும்
   குருதியே போலுமே.
 
வெயில் மண் கிழித்திட-  சூரிய  வெப்பம்  நிலத்தை   வெடிக்கச்
செய்வதால்; கண்கிழித்து உமிழ் விடக் கனல் - கண்களைக் கிழித்துக்
கொண்டு   உமிழ்கிற   விட   நெருப்பை  உடைய;  அரா  அரசு  -
பாதாளத்திலுள்ள  பாம்பரசனது; பல்மணி. கார்விண் கிழித்து ஒளிரும்
மின்   அனைய  -  பல  பணாமணிகளிலிருந்தும். கரிய மேகங்களைப்
பிளந்து  கொண்டு  ஒளிவீசும் மின்னலுக்கு ஒப்பாக; எழும் சுடர்கள் -
தோன்றுகின்ற   மணிகளின்   செவ்வொளியானது;  மண்மகள்  உடல்
புண்கிழித்திட  -  நிலமகளின்  உடல்  புண்ணைக் கிழித்திட; எ?ழும்
குருதி போலுமே - தோன்றுகின்ற ரத்தம் போன்றதாகும்.

‘கண்விழித்து’     என்பதற்கு     ஆயிரம்தலைகைள்      உடைய
அரவரசனுக்கு உரிய இரண்டாயிரம்  கண்கைளையும்  கிழித்து  கொண்டு
எனப்பொருள்  கொள்க.   ‘கார் விண்’  என்பது ‘கிழித்தொளிரும் மின்’
என்ற    குறிப்பால்    மேகம்      என்னும்    பொருள்    பெற்றது.
தற்குறிப்பேற்றணி.                                          10