சூர்ப்பநகை கர்வ பங்கம்
பஞ்சவடியில் தங்கியிருந்த இராமனைக் கண்ட சூர்ப்பனகைக்கு, இராமனை அடைய விரும்பியது. சூர்ப்பனகையின் விருப்பத்தை இராமன் மறுத்ததால், இலக்குவனிடம் தன் காதலை கூறியது. சீதையின் பொருட்டு, இருவரும் தன் காதலை ஏற்கவில்லை எனக் கருதிய சூர்ப்பநகை, சீதையை விழுங்க முயற்சிக்கையில், இராமரின் ஆணைப்படி, இலக்குவன், சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் வாளால் வெட்டியது. இதனால் அவமானம் அடைந்த சூர்ப்பனகை, பழி தீர்க்க, இராவணனின் தம்பியர்களான கரன் மற்றும் தூஷணன் ஆகியவர்களிடம், சீதையைக் கவர்ந்து, இராம - இலக்குவர்களை கொல்லத் தூண்டினாள்.
