கையடைப் படலம் - 334

bookmark

இராம லக்குமணரைத் தசரதன்
விசுவாமித்திரனிடம் ஒப்படைத்தல்

334.

வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி. ‘நல்
தந்தை நீ. தனித் தாயும் நீ. இவர்க்கு.
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!’ என்றான்.
 
வந்த  நம்பியை  -  அவ்வாறு அருகு வந்து சேர்ந்த நம்பியாகிய
இராமனை;  தம்பி தன்னொடும் - ராமனை விட்டு நீங்காத தம்பியான
இலக்குவனோடும்; முந்தைய  நான்மறை முனிக்குக் காட்டி - பழைய
வேதங்களை   அறிந்தநல்  முனிவனாகிய விசுவாமித்திரனுக்குக் காட்டி;
நல்தந்தை நீ தனித்தாயும் நீ இவர்க்கு -இந்த குமாரர்களுக்கு இனித்
தாயும்  தந்தையும்  நீங்களே  தாம்;   எந்தை  தந்தனன்-எந்தையே!
இவர்களைத்  தங்களிடம் கொடுத்தேன்; இயைந்த செய்க என்றான் -
இவர்களைக்   கொண்டு   இயைந்தபடி   காரியங்களைச்  செய்வீராக
என்றான்.

நம்பி: பெருமை உடையவன் (இராமன்). ‘தம்பி’ எனப்  பொதுப்படக்
கூறினும்    இலக்குவனையே  குறிக்கும்.  காட்டுதல்: சுட்டிக் காட்டுதல்.
எந்தை:   எந்தையே  என்னும்  விளி.  இயைந்து:  உமக்கு   இயைந்த
அல்லது   அவர்கட்  கியைந்த எனவும் பொருள் கொள்ளலாம். செய்க:
வியங்கோள்.    இராம.  இலக்குவர்களை  முனிவரிடம்  ஒப்படைத்தல்
கூறப்பட்டது..  நம்பியை- தம்பியோடு - காட்டி - தந்தனன் - இயைந்த
செய்க என்பது பொருள் முடிபாகும்.                          18