கையடைப் படலம் - 332

bookmark

332.

‘பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்.
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே.
 
ஐய - தசரத மன்னனே; பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் -
பெய்கின்ற    மழையினாலே   பெருகுகின்ற   நீர்ப்பெருகு;   போய்.
மொய்கொள் வேலைவாய் - சென்று. நிர்ச் செறிவுமிக்க  கடலிடத்தே;
முடுகும் ஆறுபோல் -விரைந்து சேரும் தன்மை போல்; நின்  மகற்கு
- உனது   புத்திரனான   ராமபிரானுக்கு;   அளவில்   விஞ்சை  -
அளத்தற்கரிய  வித்தைகள்  பலவும்;   வந்து  எய்து  காலம் -வந்து
அடையும்   காலம்;   இன்று  எதிர்ந்தது   என்னவே   -  இன்று
கூடியிருக்கிறது என்று வசிட்ட முனிவன் சொல்லவும்.

இது  குளகம்.  அடுத்த  பாட்டுடன்  பொருள்  முடியும்.   பெருகு
வெள்ளம்.  பெருகிய  வெள்ளம்  (வினைத்தொகை).  போய்:  நகர்ந்து
சென்று.  மொய்:  செறிவு  (வலிமை). முடுகுதல்: விரைந்து  செல்லுதல்.
ஆறு:  தன்மை.  (ஆறுமாம்).  கடலில்  சென்று  கலக்கும்  வெள்ளம்
அளவிடற்கரியது. அதுபோல இராமனை

அடையும்    வித்தைகளும் அளவிடற்கரியனவாம். முந்திய பாடலில்
‘உறுதி  எய்தும்  நாள்’  என்று  கூறியதற்கேற்ப.   இங்கு  ‘  விஞ்சை
வந்தெய்து காலம்’ என்றார்.                                  16