கையடைப் படலம் - 322

bookmark

தசரதன் முனிவற்கு இருக்கை ஈந்து
வழிபட்டு இன்மொழி கூறல் (322-323)

322.

பணிந்து. மணி செற்றுபு குயிற்றி
   அவிர் பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு. இனிது
   அருத்தியொடு இருத்தி.
இணைந்த கமலச் சரண் அருச்சனை
   செய்து. ‘இன்றே
துணிந்தது. என் வினைத் தொடர்’
   எனத் தொழுது சொல்லும். 
 
பணிந்து  - (தயரத மன்னன் முனிவனை) வணங்கி; மணி செற்றுபு
குயிற்றி அவிர் பைம்பொன் அணிந்த தவிசு இட்டு அருத்தியொடு
இனிது  இருத்தி - மணிகள் நெருங்கப் பதித்து விளங்கும் பொன்னால்
அலங்கரிக்கப்பட்ட   ஆசனமிட்டு   (அதில்)   மிக்க   ஆர்வத்துடன்
முனிவனை   இனிதே  இருக்கச்  செய்து: இணைந்த  கமலச்  சரண்
அருச்சனை   செய்து  -  தாமரை  போன்ற  இரு   பாதங்களையும்
அருச்சித்து: என்  வினைத்  தொடர்பு - எனது  வினைப்பயன்களின்
தொடர்பு; இன்றே  துணிந்தது  என  -  இன்றே  நீங்கியது  என்று;
தொழுது சொல்லும் -அம்முனிவனை வணங்கிக் கூறலானான்.

செற்றுபு:  நெருங்க. குயிற்று: பதித்து. பைம்பொன். (பண்புத்தொகை);
பசுமையான  பொன்.  தவிசு:  இருக்கை.  அருத்தி:    ஆசை. சரணம்:
பாதம்.   அருச்சனை:   பூசனை.   வினைத்தொடர்பு:    வினைப்பயன்
இருத்தி:  பிறவினை.  இருவினைப்  பலன்களும் ‘ஆம்’   நல்வினையும்
பிறவிக்  காரணம்  என்பதால்  ‘  இருள்  சேர்   இருவினை’ என்றார்
திருவள்ளுவரும்.   பெரியோர்  வருகையால்  வினைத்    தொடர்புகள்
நீங்கும் என்பது கருத்து.                                      6