கார்முகப் படலம் - 812
சீதையின் உறுதிப்பாடு
812.
‘இல்லையே நுசுப்பு’ என்பார்.
‘உண்டு. உண்டு’ என்னவும்.
மெல்லியல். முலைகளும்.
விம்ம விம்முவாள்;
‘சொல்லிய குறியின். அத்
தோன்றலே அவன்;
அல்லனேல். இறப்பென்’ என்று.
அகத்துள் உன்னினாள்.
நுசுப்பு இல்லையே- (இவளுக்கு) இடையானது இல்லவே இல்லை;
என்பார் - என்று சொல்பவர் (உடல் பூரித்துள்ள இப்போது இடையும்
தோன்ற) ; உண்டு உண்டு என்னவும் - (இடை) இருக்கின்றது
இருக்கின்றது என்று சொல்லவும்; மெல்லியல் - சீதை; முலைகளும்
விம்ம - தனங்களும் பருக்க; விம்முவாள் - (தானும்) உடல்
பூரிப்பவளாய்; சொல்லிய குறியின் - (இவள்) சொன்ன
அடையாளங்களால்; அவன் - வில்லை முறித்தவன்; அத்தோன்றலே -
(நான் கன்னி மாடத்திலிருந்து கண்ட) அந்த ஆடவனேயாவான்;
அல்லனேல் - (அப்படி) அவனாக இல்லாவிட்டால்; இறப்பென் -
உயிரை விட்டொழிப்பேன்; என்று அகத்துள் - என்று மனத்திலே;
உன்னினாள் - உறுதி கொண்டாள்.
என்னவும்: இசை நிறை; முலைகளும்; இறந்தது தழீஇய எச்சம். 63
