கார்முகப் படலம் - 807
வில் முறிந்ததை நீலமாலை கூறுதல் (807-810)
807.
‘கய ரத துரகமாக் கடலன். கல்வியன்.
தயரதன் எனும் பெயர்த் தனிச் செல் நேமியான்.
புயல் பொழி தடக் கையான். புதல்வன்; பூங் கணை
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான்;
கயம் ரதம்- யானையும் தேரும்; துரகம் மாகடலன் - குதிரையும்
ஆகியவற்றைக் கடலெனப் படைத்தவனும்; கல்வியன் -
பெருங்கல்வியில் மேம்பட்டவனும்; புயல் பொழி தடக்கையான் -
மேகம் மழை பொழிவதுபோல் செல்வம் பொழிகின்ற நீண்ட
கையையுடையவனுமான; தயரதன் எனும் - தசரதன் என்று; பெயர்த்
தனிச் செல் - உலகம் புகழத் தனிச் செங்கோல் செலுத்தும்;
நேமியான் - பெருமன்னனின்; புதல்வன் - மைந்தன்; பூங்கணை
மயல் விளை - மலர் அம்புகளால் உலகத்தில் மயக்கத்தை
உண்டாக்கும்; மதனற்கும் - மன்மதனைக் காட்டிலும்; வடிவு
மேன்மையான் - வடிவழகு மிக்கவன் (ஒருவன் இருக்கின்றான்). 58
