கார்முகப் படலம் - 805

bookmark

தோழி நீலமாலை வருதல்

நீலமாலை உரைத்த மகிழ்ச்சிச் செய்தி

கலி விருத்தம்

805.    

வடங்களும் குழைகளும் வான வில்லிட.
தொடர்ந்த பூங் கலைகளும் குழலும் சோர்தர.
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்.
நெடுந் தடங் கிடந்த கண் நீலமாலையே.*
 
நெடுந் தடம் கிடந்த- பெரிய தடாகத்தில் கிடந்த;கண்நீலமாலை -
குவளை  போன்ற கண்களையுடைய நீலமாலை என்பவள்;  வடங்களும்
-  (தன்  கழுத்தில்  பூண்ட) ஆரங்களும்;  குழைகளும் - காதணியான
குழைகளும்;  வானவில்  இட -  வானவில்லைப்   போலப்  பல  நிற
ஒளிகளை  வீசவும்;  தொடர்ந்த  பூங்கலைகளும் - உடுத்த உடையும்;
குழலும்   சோர்தர  -  மலரணிந்த  கூந்தலும்  அவிழ்ந்து  சரியவும்;
நுடங்கிய   மின்  என  -  துவண்ட  மின்னல்  போல;  நொய்தின்
எய்தினாள் - விரைவாக ஓடி வந்தாள்.

சீதைக்குத்     திருமணம்  நடக்குமாறு  இராமன்    வில்  முறித்த
செய்தியை  விரைவில் தெரிவிக்க வேண்டுமென்ற  ஆர்வத்தோடு  சீதை
இருக்குமிடம் வந்தாள் என்பது.

தோழியின்   பெயர் நீலமாலை. வானவில் இடுதல் - இந்திரவில்லின்
தன்மையவாய்ப்  பலநில  ஒளி  வீசுதல்.  ‘திருவில் இட்டுத்   திகழ்தரு
மேனியன்’ - சிலப். 15-156.                                   56