கண்ணம்மாவின்நினைப்பு

கண்ணம்மாவின்நினைப்பு

bookmark

பல்லவி 

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா! 
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே) 

சரணங்கள் 

பொன்னை யே நிகர்த்த மேனி மின்னையே, நிகர்த்த சாயற் 
பின்னை யே! நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே) 

மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ-கண் 
பாரா யோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்னையே) 

யாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம் 
மேவு மே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்னையே)