எழுச்சிப் படலம் - 832
மகளிர் கொங்கைகள் அணிபெற்று விளங்குதல்
மகளிர் ஆடவர் திரள்
832.
முத்தினால். முழு நிலா எறிக்கும்; மொய்ம் மணிப்
பத்தியால். இள வெயில் பரப்பும்;- பாகினும்
தித்தியா நின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே.
பாகினும் தித்தியாநின்ற- வெல்லப் பாகைக் காட்டிலும் தித்திக்கும்;
சொல் சிவந்த வாய்ச்சியர்- சொல்லையும். சிவந்த வாயையும் உடைய
பெண்களின்; உத்தராசங்கம் இட்டு - மேலாடையிட்டு; ஒளிக்கும்-
மறைத்து வைத்துள்ள; கூற்றம் - இயமனைப் போன்ற வருத்தும்
தனங்கள்; முத்தினால் - (தாம் அணிந்துள்ள) முத்து மாலைகளால்;
முழு நிலவு எறிக்கும்- நிறை மதியின் ஒளியை வீசும்; மொய்ம் மணி
பத்தியால் - நெருங்கிய இரத்தின மணிகளின் வரிசையால்; இளவெயில்
பரப்பும் - இளவெயிலைப் பரவ விடும்.
தனங்களைக் கூற்றம் என்று உருவகப்படுத்தினார்.
தனங்களில் அணிந்த முத்துமணி வடங்களால் நிலவு. வெயில் என்ற
இரண்டும் ஒரே காலத்தில் தோன்றும் என்ற நயம் கருதத் தக்கது.
உத்தராசங்கம் - மேலாடை (வடசொல்). கூற்றம் உயிர்களை
உடலிலிருந்து பிரிக்க நோய் முதலியவற்றில் மறைந்துநின்று பிரித்தல்
போல இக்கூற்றமான கொங்கை மேலாடையில் மறைந்து நின்று
வருத்துகின்றது என்பது. 16
