உற்சவம்:
ஆண்டுதோறும் மலையாள மீன மாதத்தில் அதாவது, தமிழ் பங்குனி மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) சபரிமலைக் கோயிலில் விழா நடைபெறும். உற்சவக் காலத்தில் பத்து நாட்கள் கோயில் திறந்திருக்கும்.
கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகும். தொடர்ந்து பத்து நாட்களும் ‘உற்சவபலி’, ஸ்ரீபூதபலி போன்ற சிறப்புப் பூஜைகள் நடைபெறும். ஒன்பதாவது நாள் பள்ளிவேட்டை அரங்கேறும். ஐயப்பன் ஊர்வலமாகச் சென்று சரம்குத்தி என்ற இடத்தில் வேட்டையாடுவதே பள்ளிவேட்டை. பின்னர் பம்பையாற்றில் புனித ஆறாட்டு (நீராட்டு) நடைபெறும்.
பங்குனி மாதம் உத்திர நாளன்று நடைபெறும் ’பங்குனி உத்திரத்துடன்’ ஆண்டு உற்சவம் நிறைவு பெறும். உத்திரம் ஐயப்பனின் பிறந்த நட்சத்திரமாகும்.
