உமது ஆவியை விடுத்தருளும்

bookmark

உமது ஆவியை விடுத்தருளும்
ஆண்டவரே பூமியின் முகத்தைப் புதுப்பித்தருளும் (2)

1. நெஞ்சே! நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக
ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர்
மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கின்றீர்

2. பூமியை நீர் அடித்தளத்தின் மீது அமைத்தீர்
அது எந்நாளும் அசையவே அசையாது
கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கின்றீர்
வெள்ளப் பெருக்கு மலைகளை மூடியிருக்கும்படி செய்தீர்

3. நீரூற்றுகள் ஆறுகளாய் பெருக்கெடுக்க கட்டளை இடுகிறீர்
அலைகளிடையே அவைகளை ஓடச் செய்கிறீர்
அவற்றின் அருகே வானத்துப் பறவைகள் குடியிருக்கின்றன
மரக்கிளைகளிடையே இன்னிசை எழுப்புகின்றன

4. தம் உள்ளத்திலிருந்து மலைகள்மீது நீர் பாயச் செய்கிறீர்
உம் செயல்களின் பயனால் மாநிலம் நிறைவுறுகின்றது
கால்நடைகள் உண்ண புல் முளைக்கச் செய்கிறீர்
மனிதருக்குப் பயன்பட பயிர் பச்சைகள் வளரச் செய்கிறீர்