அகலிகைப் படலம் - 532

bookmark

கங்கைவெள்ளத்தைச் சிவபிரான் சடையினில் கரத்தல்

532.    

‘உந்தி அம்புயத்து உதித்தவன்
   உறைதரும் உலகும்.
இந்திராதியர் உலகமும்.
   நடுக்குற இரைத்து.
வந்து தோன்றினள் வர நதி;
   மலைமகள் கொழுநன்
சிந்திடாது. ஒரு சடையினில்
   கரந்தனன் சேர.
 
அம்புயம்-  நீரில் பிறப்பது; உந்தி  அம்புயத்து  உதித்தவன் -
பிரமன்.

கங்கா     நதி  சத்திய  லோகமும். சொர்க்கலோகமும் நடுங்கும்படி
ஆரவாரித்துக்கொண்டு    மண்ணுலகிற்கு   வந்தது;  அதனைச்  சிவன்
தனது சடையில் சிறிதும் சிதறாமல் தாங்கினான் என்பது.          5-23