அகலிகைப் படலம் - 529

bookmark

பகீரதன் சிவபிரானையும் கங்கையையும் குறித்து
மீண்டும் நோற்றல் (529-530)

529.    

‘கரந்தை. மத்தமோடு. எருக்குஅலர்.
   கூவிளை. கடுக்கை.
நிரந்த பொற் சடை நின்மலக்
   கொழுந்தினை நினையா.
அரந்தை உற்றவன். இரண்டரை
   ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர.
   வரை உறை புனிதன்.
 
கரந்தை  -  ஒரு பூண்டு;  கூவிளை - (இலை) -  முதலாகு பெயர்
(வில்வம்);  மத்தம்  -  உன்மத்தம்.  ஊமத்தம்: முதற்குறை: வரைமகள்
புனிதன்-  பார்வதி  கொழுநனான சிவன். கரந்தை. ஊமத்தம். எருக்கு.
வில்வம். கொன்றை ஆகியன சிவனுக்கு உரியவை.

கங்காதேவியின்    மொழியைக்  கேட்டுப் பகீரதன் மீண்டும் சிவனை
நோக்கிக்  தவம்  புரிந்தான்   என்பதும்  சிவன் அவன்முன் தோன்றிக்
காட்சி தந்தான் என்பதும் இதிற் சொல்லப்பெறுகின்றன.           5-20