அகலிகைப் படலம் - 526
பிரமன் வரம் தந்து மறைதல்
526.
‘ “மாக மா நதி புவியிடை நடக்கின்.
மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு
அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி. நீ
அருந் தவம் தொடங்கு” என்று
ஏகினான். உலகு அனைத்தும் எவ்
உயிர்களும் ஈன்றான்.
வேறு- (வேற்றோர்) - பண்பாகு பெயர்; கண்ணுதல் -
அன்மொழித்தொகை; தோகை பாகன் - சிவன்.
ஆகாய கங்கையைத் தாங்கும் வல்லமை பூமிக்கு இல்லை;
அவ்வல்லமை சிவனிடமே உள்ளது; அவனை நோக்கித் தவம்
செய்யுமாறு பகீரதனிடம் நான்முகன் கூறினான் என்பது. 5-17
