அகலிகைப் படலம் - 525

bookmark

பிரமன் , கங்காநதியால் நின் முன்னோர் நல் கதி
பெறுவர் எனல்

525.    

‘ “நின் பெருந் தவம் வியந்தனம்;
   நினது நீள் குரவர்.
முன்பு இறந்தனர். அருந் தவன்
   முனிவின்; ஆதலினால்.
மன் பெரும் புவிஅதனில்.
   வான் நதி கடிது அணுகி.
என்பு தோயுமேல். இருங் கதி
   பெறுவர்” என்று இசைத்தான்.
 
கதி - இறந்தபின் அடையும் பதவி; வான் நதி - ஆகாய கங்கை.

‘சாம்பரான     சகரர் நற்கதியடைய வானகங்கை மண்ணுலகம் வந்து
அவ்வெலும்புகள்   மேல்  படிய  வேண்டும் என்று பிரமன் பகீரதனிடம்
கூறினான் என்பது.                                         5-16