அகலிகைப் படலம் - 502
அமிர்தத்தைத் தேவர்களே பெறுதல்
502.
‘இறந்து நீங்கின யாவையும்.
எம்பிரான் அருளால்.
பிறந்த; அவ்வயின் சுராசுரர்
தங்களில் பிணங்க.
சிறந்த மோகினி மடந்தையால்.
அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து
அமரர்கள் துய்த்தார்.
மோஹிநீ - மோகினி (தன்னைக்கண்டவரை); மதிமயங்கச்
செய்யும் அழகுடைய தெய்வமகள்.
கடலில் சென்று ஒளித்த தெய்வலோகப் பொருள்கள் யாவும்
மீண்டும் தோன்றின; அவ்வாறு தோன்றிய அமிர்தம் காரணமாகத்
தேவர் அசுரர்க்குப் பிணக்கு உண்டாகத் திருமால் சூழ்ச்சி செய்து
அவ் அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தான் என்பது. 3-23
