அகலிகைப் படலம் - 497

bookmark

பிரமன் முதலியோர்க்குத் திருமால் அபயமளித்தல்

497.

‘வெஞ் சொல் மா முனி வெகுளியால்
   விளைந்தமை விளம்பி.
கஞ்ச நாள்மலர்க் கிழவனும்.
   கடவுளர் பிறரும்.
“தஞ்சம் இல்லை; நின் சரணமே
   சரண்” எனச் செப்ப.
“அஞ்சல். அஞ்சல்! என்று உரைத்தனன்.
   உலகு எலாம் அளந்தோன்.
 
உலகெலாம் அளந்தோன்-  மூவுலகங்களையும்  தன்  அடிகளால்
அளந்தவன் - திருமால்; தஞ்சம் - புகலிடம்.

தேவர்கள்     துருவாச   முனிவனது   சாபத்தின்     விளைவைத்
திருமாலிடம்   எடுத்துச்   சொல்ல.  அத்திருமாலும். ‘அஞ்சாதீர்’ என்று
அவர்களுக்கு அபயம் தரும் பாங்கு இதில் கூறப்படுகிறது.         3-18