அகலிகைப் படலம் - 496

bookmark

தேவர்கள் திருமாலைச் சரணடைதல்

496.    

‘வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய. வானோரும்.
தையல் பாகனும். சதுமுகக் கடவுளும். கூடி.
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார்.
 
மறு-  திருமாலின்  மார்பில்  உள்ள  உத்தமக்குறி. திருமகள் பிறர்
மார்பை மறுத்தற்குக் காரணமான மார்பு; தையல் பாகன் - சிவன்.

வானுலகு    எங்கும் வறுமை நோய் வாட்டத் தேவர்களும். சிவனும்.
நான்முகனும்  திருமாலை  அடைந்து  முறையிட்ட செய்தியைக் கூறுவது.
செல்வத்தை    இழந்த   தேவர்கள்  அச்செல்வத்திற்குத்  தலைவியான
திருமகளின் கணவனை அடைந்தனர் என்றார்.                  3-17