அகலிகைப் படலம் - 482
வித்தியாதரமங்கை திருமகள்பால் மலர்மாலை பெறுதல்
482.
‘அண்ட கோளகைக்கு அப்புறத்து.
என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி. ஓர்
விஞ்சையர் கோதை.
புண்டரீக மென் பதத்தியைப்
புகழ்ந்தனள்; புகழ.
வண்டு அறா மது மாலிகை
கொடுத்தனள் மகிழ்ந்து.
நீள்பதம் - வைகுண்டம்.
ஒரு வித்தியாதரப் பெண். செந்தாமரையில் உள்ள திருமகளைப்
பாடித் துதித்தாள். அது கேட்டு மகிழ்ந்த இலக்குமி மனமுவந்து தனது
பூமாலையை அவள் கையில் கொடுத்தாள் என்பது. 3-2
