வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே

bookmark

சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)

1. பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை (2)
கரங்களை விரித்தே கள்வனைப் போல் -2
கழுமரத்தினில் கண்டதினால்

2. கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே (2)
மண்ணவர்க்காகத் தன்னுயிரை -2
இன்று மாய்த்திடக் கண்டதினால்