நகர் நீங்கு படலம் - 1878
1878.
நல் நெடு நளிர் முடி சூட, நல் மணிப்
பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன்,
துள் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப்
பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான்.
நல் நெடு நளிர் முடி சூட - சிறந்த பெரிய பெருமை உடைய
மகுடத்தைச்சூடிக்கொள்ள; நல் மணிப் பொன் நெடுந் தேரொடும்
பவனி போனவன் - நல்ல மணிகள்கட்டப்பெற்ற பொன்னால் ஆகிய
பெரிய தேரின்மீது உலாச் சென்ற இராமன்; மீண்டும் - திரும்பவும்; அப்
பொன் நெடுந் தெருவிடை - பொலிவுபெற்ற அதே பெருவீதியில்; துன்
நெடுஞ் சீரையும் சுற்றி - நெருங்கிய பெரிய மரவுரியைச் சுற்றிக்
கொண்டு; போதல் மேயினான் - போவதைப் பொருந்தினான்.
தேரொடு சென்றவன், சீரையொடு கொண்டு வந்தான் என்பது ஒரு
சொல் நயம். இரண்டையும் இணைத்துக் காட்டி அவலத்தை மேலும்
அதிகமாக்கினார் கம்பர்.‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்,
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்க்கு’ (சிலப். 23:182 - 3) என்ற
கண்ணகி நிலையை ஒப்பிடுக. 182
