நகர் நீங்கு படலம் - 1710

1710.
‘சிறந்த தம்பி திரு உற, எந்தையை
மறுந்தும் பொய் இலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ?
‘சிறந்ததம்பி திரு உற - (என்னிலும்) சிறந்த தம்பியாகிய பரதன்
அரசச்செல்வம் பெற; எந்தையை - என் தந்தையாகியதயரதனை;
மறந்தும் பொய் இலன்ஆக்கி - மறப்பினாலும்பொய் சொல்லாத சத்திய
வாக்கினனாகச் செய்து; வனத்திடை -காட்டில்; உறைந்து தீரும் உறுதி
பெற்றேன் - வசித்துத் திரும்பி வருகின்ற நன்மையைஅடைந்தேன்;
இதின் - இதைக்காட்டிலும்; யான்பிறந்து பெறும்பேறு என்பது
யாவதோ?’ - யான் பிறவி எடுத்துப் பெறுகின்ற பாக்கியம் என்பது வேறு
என்ன இருக்கிறது; (இல்லை).
‘பங்கம் இல் குணத்து எம்பி’ என்றது (1608.) போல இங்கும் ‘சிறந்த
தம்பி’ என்றதுகாண்க. ‘யாவதோ’ ஓகாரம் வினாப் பொருளில் வந்தது.
இனி, யாவது என்பதே வினாவாதலின்,‘ஓ’ காரம் எதிர்மறை குறித்தது
எனினும் ஆம். 16