சடாயு உயிர் நீத்த படலத்தின் பாடல்கள்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
சடாயு உயிர் நீத்த படலம்
இராவணனை கழுகு அரசன் சடாயு எதிர்த்தல்
என்னும் அவ் வேலையின்கண்எங்கு அடா போவது? என்னா,
நில் நில் என்றுஇடித்த சொல்லன்நெருப்பு இடைப் பரப்பும் கண்ணன்
மின் என விளங்கும் வீரத் துண்டத்தன்; மேரு என்னும்
பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்;
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்துஎழுந்துஒன்றோடு ஒன்று
பூழியின் உதிரவிண்ணில் புடைத்துஉறக் கிளர்ந்து பொங்கி,
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதரமுழுதும் வீசும்
ஊழி வெங் காற்று இது என்னஇரு சிறை ஊதை மோத.
சாகை வன் தலையொடு மரமும் தாழமேல்
மேகமும் விண்ணின் மீச்செல்லமீமிசை
மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான் என,
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே.
யானையும்யாளியும்முதல யாவையும்,
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை
மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால்,
வானமும் கானமும் மாறு கொள்ளவே.
உத்தமன் தேவியைஉலகொடு ஓங்கு தேர்
வைத்தனை! ஏகுவது எங்கு? வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென்ஈண்டு எனா,
பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான்;
வந்தனன்-எருவையின் மன்னன்; மாண்பு இலான்
எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்;
சிந்துரக் கால்சிரம்செக்கர் சூடிய
கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான்.
சடாயு சீதையிடம் அஞ்சவேண்டாம் எனக் கூறிஇராவணனுக்கு அறிவுரை கூறுதல்
ஆண்டு உற்ற அவ் அணங்கினைஅஞ்சல் எனா,
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான்,
மூண்டுற்று எழு வெங் கதம் முற்றிலனாய்,
மீண்டுற்று உரையாடலை மேயினனால்;
கெட்டாய் கிளையோடும்; நின் வாழ்வை எலாம்
சுட்டாய்; இது என்னை தொடங்கினை? நீ
பட்டாய் எனவே கொடு பத்தினியை
விட்டு ஏகுதியால்விளிகின்றிலையால்.
பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின்
மாதா அனையாளை மனக்கொடுநீ
யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்?
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ?
உய்யாமல் மலைந்துஉமர் ஆர் உயிரை
மெய்யாக இராமன் விருந்திடவே,
கை ஆர முகந்து கொடுஅந்தகனார்,
ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ?
கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல்
விடும் உண்டை கடாவ விரும்பினையே?
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும்வன்
கடு உண்டுஉயிரின் நிலை காணுதியால்!
எல்லா உலகங்களும்இந்திரனும்,
அல்லாதவர் மூவரும்அந்தகனும்,
புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ?
இம்மைக்குஉறவோடும் இறந்தழியும்
வெம்மைத் தொழில்இங்குஇதன்மேல் இலையால்;
அம்மைக்குஅரு மா நரகம் தருமால்;
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினைநீ?
முத் தேவரின் மூல முதற் பொருள் ஆம்
அத் தேவர் இம் மானிடர்; ஆதலினால்,
எத் தேவரோடு எண்ணுவது? எண்ணம் இலாய்!
பித்தேறினை ஆதல் பிழைத்தனையால்.
புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
வரம் பெற்றவும்மற்று உள விஞ்சைகளும்,
உரம் பெற்றன ஆவன-உண்மையினோன்
சரம் பற்றிய சாபம் விடும் தனையே.
வான் ஆள்பவன் மைந்தன்வளைத்த விலான்,
தானே வரின்நின்று தடுப்பு அரிதால்;
நானே அவண் உய்ப்பென்இந் நன்னுதலை;
போநீ கடிது என்று புகன்றிடலும்.
இராவணன் சீதையை விட மறுத்தல்
கேட்டான் நிருதர்க்கு இறைகேழ் கிளர் தன்
வாள் தாரை நெருப்பு உகவாய் மடியா,
ஓட்டாய்; இனி நீ உரை செய்குநரைக்
காட்டாய் கடிது என்றுகனன்று உரையா.
வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப்
பெரும் புண் திறவாவகை பேருதி நீ;
இரும்பு உண்ட நீர் மீளினும்என்னுழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்.
சடாயு சீதைக்கு அபயம் அளித்தல்
என்னும் அளவில்பயம் முன்னின் இரட்டி எய்த,
அன்னம் அயர்கின்றது நோக்கிஅரக்கன் ஆக்கை
சின்னம் உறும் இப்பொழுதே; சிலை ஏந்திநங்கள்
மன்னன் மகன் வந்திலன் என்றுவருந்தல்; அன்னை!
முத்து உக்கனபோல் முகத்து ஆலி முலைக்கண் வீழ,
தத்துற்றுஅயரேல்; தலைதால பலத்தின் ஏலும்
கொத்து ஒப்பன கொண்டுஇவன் கொண்டன என்ற ஆசை
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான்.
சடாயு நிகழ்த்திய பெரும் போர்
இடிப்பு ஒத்த முழக்கின்இருஞ் சிறை வீசி எற்றி,
முடிப் பத்திகளைப் படி இட்டுமுழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்றவன்காண்தகும் நீண்ட வீணைக்
கொடிப் பற்றி ஒடித்துஉயர் வானவர் ஆசி கொண்டான்.
அக் காலைஅரக்கன்அரக்கு உருக்கு அன்ன கண்ணன்,
எக் காலமும்இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான்
நக்கான்உலகு ஏழும் நடுங்கிடநாகம் அன்ன
கைக் கார் முகத்தோடு கடைப் புருவம் குனித்தான்.
சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி
மண்டசிறகால் அடித்தான் சில; வள் உகீரால்
கண்டப்படுத்தான் சில; காலனும் காண உட்கும்
துண்டப் படையால்சிலை துண்ட துண்டங்கள் கண்டான்.
மீட்டும் அணுகா,-நெடு வெங் கண் அனந்த நாகம்
வாட்டும் கலுழன் எனவன் தலை பத்தின் மீதும்
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் - சேம வில் கால்
கோட்டும் அளவில்மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான்.
எழுந்தான் தட மார்பினில்ஏழினொடு ஏழு வாளி
அழுந்தாது கழன்றிடப் பெய்துஎடுத்து ஆர்த்துஅரக்கன்
பொழிந்தான்புகர் வாளிகள் மீளவும்; போர்ச் சடாயு
விழுந்தான் எனஅஞ்சினர்விண்ணவர் வெய்து உயிர்த்தார்
புண்ணின் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன்,
மண்ணில்கரனே முதலோர் உதிரத்தின் வாரிக்-
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்றுமீள
விண்ணில் பொலிகின்றது ஓர் வெண் நிற மேகம் ஒத்தான்.
ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; அவன் தோள்
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்திமூக்கால்
கொத்தாநகத்தால் குடையாசிறையால் புடையா,
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான்.
அறுத்தானைஅரக்கனும்ஐம்பதொடு ஐம்பது அம்பு
செறித்தான் தட மார்பில்; செறித்தலும்தேவர் அஞ்சி
வெறித்தார்; வெறியாமுன்இராவணன் வில்லைப் பல்லால்
பறித்தான் பறவைக்கு இறைவிண்ணவர் பண்ணை ஆர்ப்ப.
எல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்புஈசனோடும்,
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி,
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான் -
சொல் இட்டு அவன் தோள் வலியார் உளர் சொல்ல வல்லார்?
மீளா நிறத்து ஆயிரங் கண்ணவன் விண்ணின் ஓட,
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி,
தாளால் இறுத்தான் - தழல் வண்ணன் தடக் கை வில்லைத்
தோளால் இறுத்தான் துணைத் தாதைதன் அன்பின் தோழன்.
இராவணன் தெய்வ வாள் எறிய சடாயு வீழ்தல்
சீதை துயர்க்கடலில் ஆழ்தல்
வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்துமிக்கான்;
வான் வழி அரக்கன் ஏகல்
இனி என்ன ஆகுமோ என எண்ணி சடாயு இரங்கல்
சீதை சிறையுறல்
எதிர்பாராத வகையில் இராம இலக்குவர் சந்தித்தல்
பின் இளையவன் நிலை பேசுவாம் அரோ.
பருவரல் மீதிடப் பதைக்கும் நெஞ்சினான்,
பெருமகன் தனைத் தனிப் பிரிந்து பேதுறும்
திரு நகர்ச் செல்லும் அப் பரதன் செய்கையான்.
புண்டரீகத் தடங்காடு பூத்துஒரு
கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான் தனைக்
கண்டனன்; மனம் எனக் களிக்கும் கண்ணினான்.
பெண் எனும் பேதைமை மயக்கபேதினால்
உள் நிறை சோரும் என்றுஊசலாடும் அக்
கண்ணனும் இளவலைக் கண்ணுற்றான் அரோ.
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவநிலை தேர வந்த மருளோ?
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்குதனியே,
என் சொல் கடந்துமனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே.
பொன் துன்னும் வில் கை இள வீரன் வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில்
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்தவிரைவோடு புல்லிஉருகா-
நின்றுஉன்னி வந்த நிலை என்கொல்? என்றுநெடியோன் விளம்பநொடிவான்.
"வல் வாய் அரக்கன் உரை ஆகும்" என்னமதியாள்மறுக்கம் உறுவாள்
"நில்லாது மற்று இது அறிபோதி" என்னநெடியோய் புயத்தின் வலி என்
சொல்லால் மனத்தின் அடையாள்சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள்.
மா கானகத்தினிடை ஓடலோடும்மனம் அஞ்சிவஞ்ச வினையேன்
போகாது இருக்கின்இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா,
ஆகாது இறக்கை; அறன் அன்று; எனக்கொடுஇவண் வந்தது என்னஅமலன்.
ஆஆ! அலக்கண் உறுவாள்உரைத்த பொருளோஅகத்தின் அடையாள்;
காவா நிலத்தின் வரும் ஏதம்; மற்று அது ஒழியாது; கைக்கொடு அகலப்
போவார்பிரிக்க முயல்வார்புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா.
சிந்தாகுலத்தொடு உரைசெய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய்;
முந்தே தடுக்கஒழியாதுஎடுத்த வினையேன் முடித்த முடிவால்,
அந்தோ கெடுத்தது எனஉன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான்.
காணின்கலந்த துயர் தீரும்; அன்றி அயல் இல்லை என்றுகடுகி,
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்றுசிலை வாளி அன்ன விசை போய்,
ஆணிப் பசும் பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா.
தோடு இவர்ந்த பூஞ் சுரி குழலாள்தனைக் காணான்;
கூடு தன்னுடையது பிரிந்துஆர் உயிர்குறியா,
தேடி வந்துஅது கண்டிலது ஆம் எனநின்றான்.
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான்; உதவ
வைத்த மா நிதிமண்ணொடும் மறைந்தனவாங்கிப்
பொய்த்துளோர் கொளதிகைத்துநின்றானையும் போன்றான்.
எண் சுழன்றது; சுழன்ற அவ் எறி கடல் ஏழும்;
விண் சுழன்றது; வேதமும் சுழன்றது; விரிஞ்சன்
கண் சுழன்றது; சுழன்றதுகதிரொடு மதியும்.
திறத்தைச் சீறும்கொல்? முனிவரைச் சீறும்கொல்? தீயோர்
மறத்தைச் சீறும்கொல்? "என்கொலோ முடிவு?" என்றுமறையின்
நிறத்தைச் சீறும்கொல் நெடுந்தகையோன்? எனநடுங்கா.
மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும்
காலம் ஆம் எனகடையிடு கணிக்க அரும் பொருள்கள்
மேல கீழுறகீழன மேலுறும் வேலை.
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம்பயன் இன்று
ஓரும் தன்மை ஈது என் என்பதுஉரன் இலாதவர்போல்;
தூரம் போதல்முன் தொடர்தும் என்றுஇளையவன் தொழலும்.
தாம வார் கணைப் புட்டிலும் முதலிய தாங்கி,
வாம மால் வரை மரன் இவை மடிதரவயவர
பூமிமேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார்.
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை; மெய் உற வெந்த
புண்ணினூடு உறு வேல் எனமனம் மிகப் புழுங்கி
எண்ணிநாம் இனிச் செய்வது என்? இளவலே! என்றான்.
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே! வானம்,
விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று; விம்மி,
நிற்கும் நோக்கு இது என் பயத்தது? எனஇளையவன் நேர்ந்தான்.
ஏகியோசனை இரண்டு சென்றார்; இடை எதிர்ந்தார்,
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான,
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல்.
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது? என்று அயிர்த்தார்;
துண்ட வாளினின் சுடர்க் கொடி துணிந்தது என்று உணரா,
புண்டரீகக் கண் புனல் வரபுரவலன் புகல்வான்.
மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால்; மொய்ம்பின்
தாக்கினான்; நடு அடுத்தது தெரிகிலம்; தமியன்;
யாக்கை தேம்பிடும்; எண் அரும் பருவங்கள் இறந்தான்.
சென்று கூடல் ஆம்; பொழுது எலாம் தடுப்பது திடனால்;
வென்று மீட்கினும் மீட்குமால்; வேறுற எண்ணி,
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை என்றலும்நெடியோன்.
படைக்கலன்கள் சிதைந்து கிடத்தல்
படரும் கால் எனகறங்கு எனசெல்லுவார் பார்த்தார்;
மிடல் கொள் வெஞ் சிலைவிண் இடு வில் முறிந்தென்ன,
கடலின்மாடு உயர் திரை எனகிடந்தது கண்டார்.
மலை கிடந்தென வலியது; வடிவினால் மதியின்
கலை கிடந்தன்ன காட்சியது; இது கடித்து ஒடித்தான்;
நிலை கிடந்தவா நோக்கு எனநோக்கினன் நின்றான்.
சென்று நோக்கினர்; திரி சிகைக் கொடு நெடுஞ் சூலம்
ஒன்றுபல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு
குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார்.
எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம்,
நெறிக் கொள் கானகம் மறைதரநிருதர்கோன் நெஞ்சின்,
பறித்து வீசியகவசமும் கிடந்தது பார்த்தார்.
தான் கிடந்துழிச் சாரதி கிடந்துழிச் சார்ந்தார்;
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது; உலகின்
வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார்.
விண் தலம் துறந்துஇறுதியின் விரி கதிர் வெய்யோன்
மண்டலம் பல மண்ணிடைக் கிடந்தெனமணியின்
குண்டலம் பலகுலமணிப் பூண்களின் குவியல்.
ஒருவனொடு பொருதவர் மிகப் பலர் போலும் என இராமன் கூறல்
வாள் இமைப்பன பல உள; மணி முடி பலவால்;
நாள் அனைத்தையும் கடந்தனன்தமியன்நம் தாதை;
யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர்; இளையோய்!
பொருதவன் இராவணன் ஒருவனே என இலக்குவன் கூறல்
தருவின் நீளிய தோள் பலதலை பலஎன்றால்
பொருது தாதையை இத்தனை நெறிக் கொடு போனான்
ஒருவனேஅவன் இராவணன் ஆம் என உரைத்தான்.
சடாயுவைக் கண்டுஇராமன் புலம்புதல்
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான்,
உடலுள் நாட்டிய குருதிஅம் பரவையின் உம்பர்,
கடலுள் நாட்டிய மலை அன்ன தாதையைக் கண்டான்.
தள்ளி ஓங்கிய அமலன்தன் தனி உயிர்த் தந்தை
வள்ளியோன் திரு மேனியில்தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை எனவீழ்ந்தான்.
அயிர்த்த தம்பி புக்குஅம் கையின் எடுத்தனன்அருவிப்
புயல் கலந்த நீர் தெளித்தலும்புண்டரீகக் கண்
பெயர்த்துபைப்பைய அயர்வு தீர்ந்துஇனையன பேசும்:
முந்து ஆரே உள்ளார்? முடிந்தான் முனை ஒருவன்;
எந்தாயே! எற்காக நீயும் இறந்தனையால்;
அந்தோ! வினையேன் அருங் கூற்றம் ஆனேனே!
தன் உறுவல் தீர்ப்பான்தனி உறுவது ஓராதே,
உன் உறவுநீ தீர்த்தாய்; ஓர் உறவும் இல்லாதேன்
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன்? எந்தாயே!
பூண்டேன் விரதம்; அதனால் உயிர் பொறுப்பேன்;
நீண்டேன் மரம் போலநின்று ஒழிந்த புன் தொழிலேன்;
வேண்டேன்இம் மா மாயப் புன் பிறவி வேண்டேனே!
கொன்றானும் நின்றான்; கொலையுண்டு நீ கிடந்தாய்;
வன் தாள் சிலை ஏந்திவாளிக் கடல் சுமந்து
நின்றேனும் நின்றேன்; நெடு மரம் போல் நின்றேனே!
இல் உடையாள் காணஇறகு உடையாய்! எண் இலாப்
பல் உடையாய்! உன்னைப் படை உடையான் கொன்று அகல,
வில் உடையேன் நின்றேன்; விறல் உடையேன் அல்லேனோ?
சடாயு மூர்ச்சை தெளிந்து இராம இலக்குவரை உச்சி மோந்து நடந்தவை உரைத்தல்
தன் நேர் இலாதானும் தம்பியும் அத் தன்மையனாய்;
உன்னாஉணர்வு சிறிது உள் முளைப்பபுள்ளரசும்,
இன்னா உயிர்ப்பான்இருவரையும் நோக்கினான்.
கொற்றவரைக் கண்டான்; தன் உள்ளம் குளிர்ப்புற்றான்;
இற்ற இரு சிறகும்இன்னுயிரும்ஏழ் உலகும்
பெற்றனனே ஒத்தான்; பெயர்த்தேன் பழி என்றான்.
போக்குகின்றேன்; கண்ணுற்றேன்புண்ணியரே! வம்மின் என்று
தாக்கி அரக்கன் மகுடத் தலை நிகர்த்த
மூக்கினால் உச்சி முறைமுறையே மோக்கின்றான்.
நெஞ்சகமே முன்னே நினைவித்தது; ஆனாலும்,
அம் சொல் மயிலைஅருந்ததியைநீங்கினிரோ,
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்? என்று உரைத்தான்.
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறாவகை,
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா
நின்றதும்நிகழ்ந்ததும்நிரப்பினான் அரோ.
இராம இலக்குவருக்கு சடாயு ஆறுதல் கூறுதல்
ஏற்றுஉணர்ந்துஎண்ணிஅவ் எருவை வேந்தனும்,
மாற்ற அருந் துயர் இவர் மனக் கொளாவகை
தேற்றுதல் நன்று எனஇனைய செப்புவான்:
"துதி அறு பிறவியின் இன்ப துன்பம்தான்
விதி வயம் என்பதை மேற்கொளாவிடின்,
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ?
எரிவுசெய்து ஒழியும் ஈது இழுதை நீரதால்;
பிரிவுசெய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை
அரிவு செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ?
விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ?
இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார்,
தலைக் கலந்துஇரந்தது தவத்தின் பாலதோ?
வெங் கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்;
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர்த்
திங்களும்ஒரு முறை வளரும் தேயுமால்.
சுந்தரத் தோளினிர்! தொன்மை நீரவால்;
மந்திர இமையவர் குருவின் வாய்மொழி
இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ?
கடைத் தொழில் அவுணனால்குலிசக்கையினான்
படைத்தனன் பழிஅதுபகழி வில் வலாய்!
துடைத்தனன் நுந்தைதன் குவவுத் தோளினால்.
தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும்தந்ததேயால்;
கள்ளப் போர் அரக்கர் என்னும் களையினைக் களைந்து வாழ்தி;
புள்ளிற்கும்புலன் இல் பேய்க்கும்தாய் அன்ன புலவு வேலோய்!
எடுத்தனன் ஏகுவானைஎதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு
தடுத்தனேன்ஆவது எல்லாம்; தவத்துஅரன் தந்த வாளால்,
படுத்தனன்இங்கு வீழ்ந்தேன்; இது இன்று பட்டது என்றான்.
ஊறின உதிரம்செங் கண்; உயிர்த்தனஉயிர்ப்புச் செந் தீ;
ஏறின புருவம் மேல் மேல்; இரிந்தன சுடர்கள் எங்கும்;
கீறினது அண்டகோளம்; கிழிந்தன கிரிகள் எல்லாம்.
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரியகாவல்
விண்ணகம் திரியமேலை விரிஞ்சனும் திரியவீரன்,
எண் அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே?
வெறித்து நின்றுஉலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை,
பொறிப் பிதிர் படலைசெந் தீப் புகையொடும் பொடிப்பபொம் என்று
எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான்:
கொண்டனன் ஏகநீ இக் கோளுறகுலுங்கல் செல்லா
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றைஇன்னே,
கண்ட வானவர்களோடும் களையுமாறுஇன்று காண்டி
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும்,
நீரொடு நிலனும் காலும்நின்றவும்திரிந்த யாவும்,
வேரொடு மடியுமாறும்விண்ணவர் விளியுமாறும்.
மிக்கன போன்று தோன்றும்உலகங்கள் வீயுமாறும்
திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்துநீரின்
மொக்குளின் உடையுமாறும்காண் எனமுனியும் வேலை,
எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன;
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என்? துணிந்த நெஞ்சின்,
அஞ்சினன்இளைய கோவும்; அயல் உளோர்க்கு அவதி உண்டோ?
சடாயு சீற்றம் தணித்தல்
இவ் வழி நிகழும் வேலைஎருவைகட்கு இறைவன்யாதும்,
செவ்வியோய்! முனியல்; வாழி! தேவரும் முனிவர்தாமும்,
வெவ் வலி வீர! நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார்
எவ் வலி கொண்டு வெல்வார்இராவணன் செயலை? என்றான்.
நாள்செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல்
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை; சொல்லும் உண்டோ?
தாள் செய்ய கமலத்தானே முதலினர்தலை பத்து உள்ளாற்கு
ஆட் செய்கின்றார்கள்; அன்றிஅறம் செய்கின்றார்கள் யாரே?
தெண் திரை உலகம் தன்னில்செறுநர்மாட்டு ஏவல் செய்து
பெண்டிரின் வாழ்வர் அன்றே? இது அன்றோ தேவர் பெற்றி!
பண்டு உலகு அளந்தோன் நல்கபாற்கடல் அமுதம் அந் நாள்
உண்டிலர் ஆகில்இந் நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ?
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய்குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால்உலகம் செய் பிழையும் உண்டோ?
ஆதலால்முனிவாய் அல்லை; அருந்ததி அனைய கற்பின்
காதலாள் துயரம் நீக்கிதேவர்தம் கருத்தும் முற்றி,
வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவிவேறும்
தீது உள துடைத்தி என்றான் - சேவடிக் கமலம் சேர்வான்.
புயல் நிற வண்ணன்ஆண்டுஅப் புண்ணியன் புகன்ற சொல்லை,
தயரதன் பணி ஈது என்னசிந்தையில் தழுவிநின்றான்;
அயல் இனி முனிவது என்னை? அரக்கரை வருக்கம் தீர்க்கும்
செயல் இனிச் செயல் என்று எண்ணிகண்ணிய சீற்றம் தீர்ந்தான்.
சடாயுவின் மரணம்
ஆயபின்அமலன்தானும்"ஐய! நீ அமைதி" என்ன,
வாயிடை மொழிந்தது அன்றிமற்று ஒரு செயலும் உண்டோ?
போயது அவ் அரக்கன் எங்கே? புகல் எனபுள்ளின் வேந்தன்
ஓய்வினன்; உணர்வும் தேயஉரைத்திலன்; உயிரும் தீர்ந்தான்.
சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே?
வேதங்கள் காண்கிலாமைவெளிநின்றே மறையும் வீரன்
பாதங்கள் கண்ணின் பார்த்தால்; படிவம் கொள் நெடிய பஞ்ச
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான்.
வீடு அவன் எய்தும் வேலைவிரிஞ்சனே முதல மேலோர்,
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும்அழுது சோர,
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த,
சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே.
தளர்ந்த இராமனை இலக்குவன் தேற்றுதல்
அறம்தலை நின்றிலாத அரக்கனின்ஆண்மை தீர்ந்தேன்;
துறந்தனென்தவம் செய்கேனோ? துறப்பெனோ உயிரை? சொல்லாய்;
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால்பெற்ற தாதை
இறந்தனன்; இருந்துளேன் யான்; என் செய்கேன்? இளவல்! என்றான்.
என்றலும்இளைய கோ அவ் இராமனை இறைஞ்சியாண்டும்
வென்றியாய்! விதியின் தன்மை பழியல விளைந்தது ஒன்றோ?
நின்று இனி நினைவது என்னே? நெருக்கி அவ் அரக்கர்தம்மைக்
கொன்றபின் அன்றோவெய்ய கொடுந் துயர் குளிப்பது? என்றான்.
எந்தை! நீ இயம்பிற்று என்னை? எண்மையன் ஆகிஏழைச்
சந்த வார் குழலினாளைத் துறந்தனை தணிதியேனும்,
உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லாச்
சிந்தையை ஆகிநின்றுசெய்வது என் செய்கை?" என்றான்.
இருவரும் சடாயுவிற்கு இறுதிக் கடன் செய்தல்
அவ் வழி இளவல் கூறஅறிவனும் அயர்வு நீங்கி,
இவ் வழி இனைய எண்ணின் ஏழைமைப்பாலது என்னா,
வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன்விளிந்த தாதை
செவ் வழி உரிமை யாவும் திருத்துவம்; சிறுவ! என்றான்.
இந்தனம் எனைய என்னகார் அகில் ஈட்டத்தோடும்
சந்தனம் குவித்துவேண்டும் தருப்பையும் திருத்திபூவும்
சிந்தினன்மணலின் வேதி தீது அற இயற்றிதெண் நீர்
தந்தனன்; தாதை தன்னைத் தடக் கையான் எடுத்துச் சார்வான்.
ஏந்தினன் இரு கைதன்னால்; ஏற்றினன் ஈமம்தன்மேல்;
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டிகடன்முறை கடவாவண்ணம்
நேர்ந்தனன் - நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான்.
தளிர்த்தன கிளர்ந்த மேனித் தாமரைக் கெழுமு செம்பூத்
துளித்தன அனைய என்னத் துள்ளி சோர் வெள்ளக் கண்ணன்
குளித்தனன்கொண்டல்ஆற்றுகுளித்தபின்கொண்ட நல் நீர்
அளித்தனன் - அரக்கர்ச் செற்ற சீற்றத்தான் - அவலம் தீர்ந்தான்.
மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல்கீழ்
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின; களித்த போலாம்;
பூட்டிய கைகளால்அப் புள்ளினுக்கு அரசைகொள்க என்று,
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே!
பல் வகைத் துறையும்வேதப் பலிக் கடன் பலவும்முற்றி,
வெல் வகைக் குமரன் நின்ற வேலையின்வேலை சார்ந்தான் -
தொல் வகைக் குலத்தின் வந்தான் துன்பத்தால்புனலும் தோய்ந்து,
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்னவெய்யோன்.
பின்னவன் உரையினை மறுத்துபேதையேன்,
அன்னவன் தனைக் கடிது அகற்றினேன்; பொரு
மன்னவன் சிறை அற மயங்கினேன்; விதி
இன்னமும் எவ் வினை இயற்றுமோ? எனா.
சடாயுவைத் தடிந்த வாளைச் சடுதியில் விதிர்க்கக் கண்டாள்;
தடால் எனக் கபாடம் சாத்திசாலையுள் சலித்தாள் அந்தோ;
விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான்,
குடா மதி கோனைச் சேரும் கோமுகன் - குறளி ஒத்தான்.
பெண்ணை விட்டு அமைந்திடின் பிழையது ஆம் என,
உள் நிறை கூடமும் உவந்த சாலையும்,
மண்ணினில் இராமன் மார்பு அமர்ந்த ஆதியும்
விண்ணினில் மேதினி வேண்டி எய்தினாள்.
முன்னமே பூமியை முகந்துபாதலம்,
தன்னிலே தரித்தன சயமும் தந்திலது
என்னவேமாகம்மீது ஏகினான் செய
உன்னியே இராவணன் உவந்ததொத்துஅரோ.
சடாயுவும் சாய்ந்தனன்; சனகி சாய்ந்தனள்;
விடா செயம் ஏதியும் பிற கதி வேறு உளோன்
தொடா மறைக் கிரியையும் சுவைத்த கோமகன்
அடாத மேற் செயல் எலாம் அமைத்தல் என் சயம்?
மூன்று பத்து ஒருபது முந்து யோசனை
ஏன்றது; பாவையும்ஏது? என்று எண்ணும்முன்,
தோன்றினன் சுபாரிசன்; தொழுதுதொல் உலகு
ஈன்றவள் இவள் எனஇசைத்து இறைஞ்சியும்.
இசைக் கடல் உறைபவ! இலங்கை வேந்தன் நீ;
திசைப்படாப் புவனம் உன் செல்வம்; என்னதோ
வசைக் கடல் வாழ்வு; இது வழக்கு என்று எண்ணியோ,
துசக் கடல் மொழி செலத் தொழுது போயினான்?
தேன்றிரும் இராவணன் சேற என்று எதிர்ந்து,
ஊன்று செம்பாதி சேய் தூண்டத் தூண்டிட,
மூன்று தன் பதத்தில் ஒன்று இழிந்த மொய் கரத்து
ஊன்று தண்டு ஒடிந்தென வீழ ஓடினான்.